குமரி : தொடர் மழையால் சாலையில் வேரோடு சாய்ந்த மரம்

Update: 2023-12-04 05:01 GMT
சாலையில் வேரோடு சாய்ந்த மரம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருவட்டார் அருகே அருவிக்கரை வலது கரை கால்வாய் வழியாக சாலையில் நின்ற பழமை வாய்ந்த அயனி மரம் ஒன்று நேற்று வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதில் அந்த பகுதியில் உள்ள ஒரு மின்கம்பம் உடைந்து சேதம் அடைந்தது. மேலும் நான்கு ரப்பர் மரங்களும் முறிந்து விழுந்தது. குறிப்பாக அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று சேதம் இன்றி இந்த விபத்தில் தப்பியது. இதனையடுத்து பொதுப்பணித்துறையினர் அந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மின்வாரியத்தினர் உடனடியாக உடைந்த மின்கப்பத்தை அப்புறப்படுத்தி, புதிய மின்கம்பம் நட்டு மின் இணைப்புகளை சரி செய்தனர். இதனால் அந்த பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News