வீர ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக விழா

திருப்போரூர், மைலை கிராமத்தில் வீர ஆஞ்சநேயர் கோவில் புனரமைக்கப்பட்ட நிலையில், கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2024-07-03 11:48 GMT

திருப்போரூர், மைலை கிராமத்தில் வீர ஆஞ்சநேயர் கோவில் புனரமைக்கப்பட்ட நிலையில், கும்பாபிஷேகம் நடந்தது. 

திருப்போரூர் ஒன்றியம், மைலை கிராமத்தில் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி, கோவில் வளாகத்தில் உள்ள வீர ஆஞ் நேயர், செல்வ விநாயகர், பாலமுருகன், பால் முனீஸ்வரர், அய்யப்பன் ஆகிய சுவாமிகளின் மூலஸ்தான கோபுரத்துடன் கூடிய திருப்பணி வேலைகள் நடந்தன. பூர்வாங்க பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை 6:00 மணிக்கு, யாகசாலையில் வைக்கப்பட்டுள்ள புனிதநீர் அடங்கிய கலசங்கள் கோவிலை சுற்றி வலம் வந்தது . தொடர்ந்து, மூலஸ்தான கோபுரத்தின் மீது வைக்கப்பட்டுள்ள கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News