மதுரை வீரன் கோவிலில் கும்பாபிஷேக விழா

அருள்மிகு ஸ்ரீ மதுரை வீரன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

Update: 2024-02-19 06:26 GMT
அருள்மிகு ஸ்ரீ மதுரை வீரன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, திருக்காம்புலியூர் கிராமத்தில் உள்ள சின்னமலை பட்டிக்கு வடக்கில், எழுந்தருளிய ஸ்ரீ மதுரை வீரன் ஆலயம் புனரமைக்கப்பட்டு, இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, இன்று அதிகாலை விநாயகர் பூஜை, புண்யாஹவாசனம், வேதப்ராயணம், பாரணப்ரதிஷ்டை, ஹோமங்கள், மகாபூர்ணாஹூதி, யாத்திராதானம், கடம்புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்ற பின், யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை, கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழாவை சிறப்பாக நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிகள் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது
Tags:    

Similar News