செஞ்சி அருகே வீரஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

செஞ்சி அருகே வீரஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு.

Update: 2024-02-17 07:10 GMT

செஞ்சி அருகே வீரஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே புலிப்பட்டு மதுரா கருவாட் சித்தாங்கல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக வீரஆஞ்சநேயர் மற்றும் விநாயகர், முருகன், நாகாத்தம்மன் சாமிக ளுக்கு சிறப்பு பூஜைகளும், யாக சாலை ஹோமங்களும் நடந்தது. அதன்பிறகு யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடு நடை பெற்று வீர ஆஞ்சநேயர், விநாயகர், முருகன், நாகாத்தம்மன், ராகு,கேது சாமிகள் மீது புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் கருவாட்சிதாங்கல் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News