புனரமைக்கப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

மேலப்பாளையத்தில் புனரமைக்கப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

Update: 2024-02-01 04:56 GMT

மேலப்பாளையத்தில் புனரமைக்கப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட, மேலப்பாளையம் கிராமத்தில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலயம் புனரமைக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மங்கல இசை உடன் மகா கணபதி பூஜை, வேத பாராயணம், திருமுறை பாராயணம், மூர்த்தி ஹோமங்கள், நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து யாக வேள்வியில் வேத மந்திரங்கள் பாராயணம் செய்து, மகா பூர்ணாகுதி, கடம்புறப்பாடு நடைபெற்று, புனித நீரை எடுத்துச் சென்று கோவில் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழாவை சிவாச்சாரியார்கள் வெகு விமர்சையாக நடத்தினர். இதனைத் தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ பாலமுருகனுக்கு மகா தீபாரதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கிராம மக்கள், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News