குறிஞ்சிப்பாடி: பல்வேறு ஆலயங்களில் பிரதோஷ வழிபாடு
குறிஞ்சிப்பாடியில் பல்வேறு ஆலயங்களில் பிரதோஷ வழிபாடு
Update: 2024-02-08 10:31 GMT
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள கோலசாமி கோவில், நெல்லுமண்டி தெருவில் உள்ள ஈஸ்வரர் கோவில், பழந்தெருவில் உள்ள ஈஸ்வரர் கோவில், பொன்வெளி சிவன் கோவில், மீனாட்சிப்பேட்டை காருண்ய ஈஸ்வரர் கோவிலில் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் பிரதோஷ வழிபாடு நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.