கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை !
பாபநாசம் அருகே கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-05-02 05:52 GMT
தற்கொலை
பாபநாசம் அருகே கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை. பாபநாசம் அருகே தேவராயன் பேட்டை கிராமம் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் மாதவன் மகன் முரளி வயது 26 விவசாயக் கூலி இவர் வயிற்றுவலி அவதிப்பட்டு வந்தார். பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் பலனளிக்காதால் வயலுக்கு வைத்திருந்த விஷ பூச்சி கொல்லி மருந்தை சாப்பிட்டு விட்டார் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மருத்துவமனையில் இறந்துவிட்டார். இதுகுறித்து அவருடைய தந்தையார் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.