குடும்ப தகராறு காரணமாக கூலித்தொழிலாளி தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம், காசம்பட்டியில் குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொன்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-05-06 09:19 GMT
தற்கொலை
நத்தம் அருகே காசம்பட்டியை சேர்ந்தவர் செல்வம் வயது 36. கூலி தொழிலாளி. இவர் குடும்பத்திற்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இதனால் வாழ்க்கையில் வரும் அடைந்த செல்வம் வீட்டின் அருகே உள்ள மாந்தோப்பில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியளவில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நத்தம் காவல் நிலைய போலீசார் செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.