டூவீலர் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி  பலி

குமாரபாளையம் அருகே நடந்து சாலையை கடந்தவர் மீதுடூவீலர் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி பலியானார்.

Update: 2024-02-26 01:31 GMT

விபத்தில் பலி

சேலம் மாவட்டம், கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராக்கிமுத்து, 65. இவர் பிப். 3ல் குமாரபாளையம் அருகே சத்யா நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு, திரும்ப ஊர் செல்ல, பஸ் ஏற வட்டமலை பஸ் நிறுத்தம் வந்தார். அப்போது பஸ் நிறுத்தம் எதிரில் இவர் நடந்து, சாலையை கடந்த போது, சேலம் கோவை புறவழிச்சாலையில் வேகமாக வந்த பஜாஜ் பல்சர் வாகனம் இவர் மோதியதில் பலத்த காயமடைந்தார்.

இவர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இவர் நேற்றுமுன்தினம் அதிகாலை 05:00 மணியளவில் உயிரிழந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான டூவீலர் ஓட்டுனர் குமாரபாளையம் ஜவுளி தொழில் செய்யும் திருமலைராஜன், 24, என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News