வடக்கத்தி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை

வடக்கத்தி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2024-02-29 02:05 GMT
வடக்கத்தி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டையில் உள்ள ஒரு சமுதாயத்திற்க்கு பாத்தியப்பட்ட பிரசித்தி பெற்ற அருள்மிகு வடக்கத்தி தங்க மாரியம்மன் கோவிலில் கொடை விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை முன்னிட்டு அருள்மிகு வடக்கத்தி தங்க மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கணபதி ஹோமம் மற்றும் வில்லிசை நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு 208 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த விளக்கு பூஜைகள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News