கல்வராயன் மலையில் மண் சரிவு - போக்குவரத்து பாதிப்பு

Update: 2023-11-08 06:45 GMT
மண் சரிவு
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில், நேற்று முன்தினம் இரவு, பலத்த இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் மலைப்பகுதியில் உற்பத்தியாகும் ஆறுகள், நீரோடைகள் மற்றும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக பெரியார் நீர்வீழ்ச்சியில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் கொடுந்துறை அருகே சாலையில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதித்தது. இதனால் கல்வராயன்மலைக்குச் சென்ற வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இதனை அறிந்த நெடுஞ்சாலைத துறையினர் காலை 8:00 மணியளவில் சாலையில் சரிந்த மண்ணை அகற்றி, சாலையை சரி செய்தனர். இதையடுத்து வாகனங்கள் சென்றன.
Tags:    

Similar News