வைகுண்ட ஏகாதசி பெருவிழாயொட்டி லட்டு தயாரிப்பு பணி தீவிரம்

குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவிலில்  வைகுண்ட ஏகாதசி பெருவிழாயொட்டி பக்தர்களுக்கு வழங்க 15 ஆயிரம்  லட்டுகள் தயாரிப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்

Update: 2023-12-21 03:20 GMT

வைகுண்ட ஏகாதசி பெருவிழாயொட்டி லட்டு தயாரிப்பு பணி தீவிரம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்  பாண்டுரங்கர் கோவில் விட்டலபுரியில்  அமைந்துள்ளது. இந்த கோவிலில் டிச 23ல் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நிகழ்வு நடைபெற உள்ளது.  பரமபத வாசல் திறப்பு விழா மற்றும் பக்தி பஜனை  நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.  வைகுண்ட ஏகாதசி விசேஷ பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக சுமார் 15,000  லட்டுக்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது . பெருமாள் கோவில் பக்தர்கள் லட்டுகள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தி பஜனை கோஷ்டிகளை வரவேற்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. பாண்டுரங்கர் கோவில் பஜனை குழுவினர் மற்றும்  விட்டல் ரெகுமாயி பக்த சேவா பஜன் மண்டலி, குழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
Tags:    

Similar News