விழிப்புணர்வு வீடியோ பிரச்சார வாகனத்தை தொடங்கி வைப்பு

கடலூரில் விழிப்புணர்வு வீடியோ பிரச்சார வாகனம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

Update: 2024-03-26 06:55 GMT

கடலூரில் விழிப்புணர்வு வீடியோ பிரச்சார வாகனம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.


பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-னை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அதிநவீன மின்னனு வீடியோ வாகனம் மூலம் 100% வாக்களிப்பது குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வீடியோ பிரச்சார வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ம. இராஜசேகரன், மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் ரவி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ. லோகநாதன் ஆகியோர் உள்ளனர்.
Tags:    

Similar News