வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

பெண் வழக்கறிஞரை தரகுறைவாக பேசிய சார்பு ஆய்வாளரை கண்டித்து பழனியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Update: 2024-01-13 07:49 GMT

காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம்

பழனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணிபுரியும் இரு பெண் வழக்கறிஞர்களும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கு தொடர்பாக பழனி தாலுகா காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது காவல்நிலையத்தில் பணியில் இருந்த சார்பு ஆய்வாளர் தியாகராஜன் என்பவரிடம், பெண் வழக்கறிஞர்கள் இருவரும் வழக்கு தொடர்பாக விசாரித்த போது தகவல் தரமறுத்துள்ளார். மேலும் வழக்கறிஞர்கள் இருவரையும் தரக் குறைவாக பேசியதாக தெரிகிறது. இதையடுத்து வழக்கறிஞர்களை தரக்குறைவாக பேசிய சார்பு ஆய்வாளரை கண்டித்து பழனி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்து காலவரையின்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News