விழுப்புரத்தில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

புதிய குற்றவியல் சட்டத்தை எதிர்த்து விழுப்புரம் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2024-07-02 07:25 GMT

புதிய குற்றவியல் சட்டத்தை எதிர்த்து விழுப்புரம் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.


இந்திய தண்டனை சட்டத்தை பாரதீய நியாய சன்ஹிதா என்றும், குற்றவியல் நடைமுறை சட்டத்தை பாரதீய நாகரிக சுரக்ஷா சன்ஹிதா என்றும், இந்திய சாட்சிய சட்டத்தை பாரதீய சாக்ஷ்ய அதிநியாயம் என்றும் மத்திய அரசு, சமஸ்கிருதத் தில் பெயர் மாற்றம் செய்து அமலுக்கு கொண்டு வந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதனை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத் தில் பணியாற்றி வரும் வக்கீல்கள், கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்த வாரம் முழுவதும் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர்.
Tags:    

Similar News