குற்றவியல் சட்டங்களை திருத்தியதை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2024-06-21 09:04 GMT

பைல் படம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் ஒன்றிய அரசு குற்றவியில் நடைமுறைச் சட்டம் இந்திய தண்டனைச் சட்டம் என சட்டங்களின் பெயரை மாற்றுவதுடன் அதில் உள்ள சட்டப்பிரிவுகளையும் மாற்றியதை கண்டித்து அவைகளை நடைமுறைப்படுத்த கூடாது என்றும் அவற்றை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பிற்கு வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பினர் வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறை சீர்காழி தரங்கம்பாடி ஆகிய நீதிமன்றங்களில் பணியாற்றி வரும் வழக்கறிஞர்கள் இன்று ஒரு நாள் நீதி மன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News