வேலூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்!

வேலூர் நீதிமன்றம் முன்பு புதிய சட்டங்களை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2024-07-03 15:55 GMT

மத்திய அரசு இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் உள்ளிட்டவற்றில் புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் நாடு முழுவதும் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது. இந்தநிலையில் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள கோர்ட்டு முன்பு தமிழ்நாடு புதுச்சேரி வக்கீல்கள் கூட்டமைப்பு சார்பில் கோர்ட்டை புறக்கணிப்பு செய்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு வேலூர் பார் அசோசியேசன் தலைவர் பி.அண்ணாமலை தலைமை தாங்கினார். கூட்டமைப்பு பொருளாளர் ரவி, வேலூர் அட்வகேட் அசோசியேசன் தலைவர் ரவிராமன், முன்னாள் அரசு வக்கீல் பாலசந்தர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் புதிய சட்டங்களை வாபஸ் பெறக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதில் வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News