கால்பந்து மைதானம் அமைக்க அடிக்கல்

திரு.வி.க.நகர் பகுதியில் ரூ.97.95 லட்சம் மதிப்பில் கால்பந்து மைதானம் அமைக்கும் பணியினை அமைச்சர் சேகர் பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தனர்.

Update: 2024-02-02 06:09 GMT

அடிக்கல் நாட்டு விழா 

 இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோர் திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74க்குட்பட்ட பெரம்பூர் நெடுஞ்சாலை (தெற்கு) பகுதியில் மூலதன நிதியின் கீழ் ரூ.97.95 இலட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட உள்ள கால்பந்து மைதானம் அமைக்கும் பணியினையும், ஏகாங்கிபுரம், 4வது “பி” தெருவில் மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.40 இலட்சம் மதிப்பில் புதிய பல்நோக்கு மையக் கட்டடம் அமைப்பதற்கான பணியினையும் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மண்டலக்குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர் புனிதவதி எத்திராஜன் மற்றும் மண்டல அலுவலர்.ஏ.எஸ்.முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News