பாய்ச்சல் காட்டிய பசு மாடு: ஓட்டம் பிடித்த மக்கள்!

பாய்ச்சல் காட்டிய பசு மாடு: ஓட்டம் பிடித்த மக்கள்!

Update: 2024-07-09 09:05 GMT

 பசு மாடு

ஆலங்குடி நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக அவ்வப்போது ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், வாகன ஓட்டுனர்களும் விபத்தில் சிக்கி வருகின்றனர். இந் நிலையில், நேற்று காலை ஆலங்குடி பஸ்நிலையத்துக்கு செல்லும் சாலையில் வடகாடு முக்கம் அருகே சுற்றித்திரிந்த பசுமாடு ஒன்று அந்த வழியாக சென்றவர்களை துரத்தி முட்ட முயன்றது. இதனால் நடந்து சென்றவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்த னர். போக்குவரத்துக்கு இடையூறாக இதுபோல் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்துக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News