ரூ.77 ஆயிரத்துக்கு ஏலம் போன எலுமிச்சை!

காப்பு கலைக்கும் நிகழ்ச்சியில் கரகத்திலிருந்த 3 எலுமிச்சை பழம், வெள்ளி காசுகள் ஏலம் விடப்பட்டது.

Update: 2024-06-22 14:38 GMT

காப்பு கலைக்கும் நிகழ்ச்சியில் கரகத்திலிருந்த 3 எலுமிச்சை பழம், வெள்ளி காசுகள் ஏலம் விடப்பட்டது.


திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு ஊராட்சி மேட்டுப்பாளையம் கிராம ஏரிக்கரை அர்னேசா அம்மன் கோவில் கூழ்வார்க்கும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அம்மனுக்கு 3 பூ கரகம் ஜோடிக்கப்பட்டு வீதி உலா நடைபெற்றது. காப்பு கலைக்கும் நிகழ்ச்சியில் கரகத்திலிருந்த எலுமிச்சை பழம், வெள்ளி காசுகள் ஏலம் விடப்பட்டது. பக்தர் ரூ.77ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார்.
Tags:    

Similar News