சுமை தூக்கும் தொழிலாளர்கள் துணை மேலாளரை சந்தித்து மனு

தென்காசியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் துணை மேலாளரை சந்தித்து மனு அளித்தனர்.

Update: 2024-05-15 07:12 GMT
தென்காசியில் சுமை தூக்கும் தொழிலாளர் துணை மேலாளரை சந்தித்து மனு

தென்காசி மாவட்டத்தில் செயல்படும் சிவில் சப்ளை குடோன் லோடுமேன் தொழிலாளிகளுக்கு சம்பள உயர்வு பல லட்சம் ரூபாய் அரியர்ஸ் பணத்தை பெற்று கொண்டதற்கான ஒரு மாதத்திற்கு முன்பே முழுமையாக கையெழுத்து வாங்கி ஒரு பகுதி வழங்காமல் அலட்சியமாக இருந்து வருவதை கண்டித்து தென்காசி சிவில் சப்ளை துணை மேலாளரை சுமை பணி சங்க மாவட்ட தலைவர் முஸாரி தலைமையில் மனு அளித்தனர்.

உடனே உரிய நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் இல்லையென்றால் மீண்டும் போராட்டங்கள் நடத்தப்படும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சுமை தீர்க்கும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News