மதுபான பாட்டிலில் விஷ நெடி - ஒருவர் கைது.

வேலகவுண்டம்பட்டி அருகே விஷ நெடியுடன் கூடிய மதுவை விற்பனைக்கு கொண்டு வந்தவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2024-07-04 08:10 GMT

கைது செய்யப்பட்ட சேகர்

வேலகவுண்டம்பட்டி காவல்துறையினர் புதன்கிழமை பெரியமணலியில் இருந்து வேலகவுண்டம்பட்டி சாலையில் குமரவேளிபாளையம் பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் அவ்வழியாக இரு சக்கர பேட்டரி வாகனத்தை வந்த நபரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த இருசக்ககர வாகனத்தில் மஞ்சள் பையில் வைத்திருந்த 10 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து சோதனை மேற்கொண்டனர்.

இதில் அந்த மதுபான பாட்டிலில் சீல் வைக்கப்பட்ட மூடி திறந்து இருந்ததுடன் விஷ நெடி வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து நடத்திய விசாரணையில் அந்த நபர் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள பெரியமணலியை சேர்ந்த கூலித்தொழிலாளி சேகர் (44) என்பது தெரியவந்தது. அதனையடுத்து சேகர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நாமக்கல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி (1) முன்பு ஆஜர் படுத்தப்பட்டு நாமக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News