சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

சிவகங்கை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்‌.

Update: 2024-06-13 14:22 GMT

சாராய விற்பனை 

சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, சிங்கம்புணரி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நாள்தோறும் கள்ள சந்தையில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்ததில் 88 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து ராசையா, செந்தில் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News