சாராயம் விற்றவர்கள் கைது

தலைவாசல் பகுதியில் சாராயம் விற்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-06-21 02:24 GMT

சாராயம் விற்றவர்கள் கைது

சேலம் மாவட்டம், தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர சாராய வேட்டை நடத்தினர். பள்ளிவாசல் பகுதியில் சாராயம் விற்ற பெத்தநாயக்கன் பாளையம் தாலுகா குன்னூர் கிராங்காடு சேர்ந்த பால்ராஜ் (வயது 25), சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்த ராமசாமி (58), காமாக்காபாளையத்தை சேர்ந்த பெரியம்மாள் (60), சிவகாமி (60) ஆகிய 4 பேரை தலைவாசல் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 40 லிட்டர் பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கைதானவர்களுக்கு சாராயம் சப்ளை செய்தவர்கள் குறித்த விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயத்துக்கு 10-க்கும் மேற்பட்டவர்கள் பலியான நிலையில் தலைவாசல் பகுதியில் சாராயம் விற்றவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Tags:    

Similar News