வீரகனூர் அருகே மது பதுக்கி விற்றவர் கைது

வீரகனூர் அருகே அத்துமீறி மது பதுக்கி விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-04-04 03:38 GMT

வீரகனூர் அருகே அத்துமீறி மது பதுக்கி விற்ற நபரை போலீசார் கைது செய்தனர். 

கெங்கவல்லி:சேலம் மாவட்டம் வீரகனூர் சுவேத நதிக்கரையில், மதுபானங்களை சிலர் பதுக்கி, அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவ தாக வீரகனூர் போலீசா ருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், எஸ்ஐ கார்த்திக் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட னர். அப்பொழுது சாக்கு பையில் மதுபானங்கள் பதுக்கி அதிக விலைக்கு விற்ற தெடாவூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News