நாமக்கல் தமிழ்ச்சங்கம் இணைந்து நடத்திய இலக்கிய விழா

Update: 2024-02-09 10:52 GMT

இலக்கிய விழா

சேந்தமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை காந்தள் இலக்கிய வட்டம் மற்றும் நாமக்கல் தமிழ்ச்சங்கம் இணைந்து நடத்திய இலக்கிய விழா கல்லூரி முதல்வர் முனைவர் தி. பாரதி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்த்துறை தலைவர் திருமதி ஞா. கலையரசி வரவேற்புரையாற்றினார். இதில் நாமக்கல் தமிழ் சங்க தலைவர் மருத்துவர் இரா. குழந்தைவேல் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். நாமக்கல் தமிழ் சங்க அமைப்புச் செயலாளர் திருக்குறள் வளையப்பட்டி கா.சுப்பிரமணியன் , நாமக்கல் தமிழ் சங்க ஒருங்கிணைப்பாளர் பசுமை மா. தில்லை சிவக்குமார் மற்றும் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் மொ. ரவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக கல்லூரியின் தமிழ்த்துறை கௌரவ விரிவுரையாளர் முனைவர் அ.மோகனா நன்றியுரையாற்றினார். இவ்விழாவில் அனைத்து துறைத் தலைவர்கள், தமிழ்த்துறை கௌரவ விரிவுரையாளர்கள் முனைர் மு.ஜமுனா திருமதி ந.பூங்கோதை திருமதி மு. தேன்மொழி மற்றும் மாணாக்கர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News