துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

மக்களவைத் தேர்தல் அமைதியாகவும், உரிய பாதுகாப்போடும் நடத்துவதற்காக மரக்காணத்தில் துணை ராணுவத்தினர் மற்றும் காவல் துறையினர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2024-03-19 05:11 GMT
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை முன்னிட்டு மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தயார் நிலையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர். இதில் பல வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் வாக்கு சாவடிக்கு சென்று தங்களது வாக்குகளை பதிவு செய்யும் வகையில் கோட்டகுப்பம் போலீஸ் டிஎஸ்பி சுனில் தலைமையில் மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு முன்னிலையில் 90 துணை ராணுவ படையினர் மற்றும் 150 போலீசார் கலந்து கொண்டு தேர்தல் விழிப்புணர்வு குறித்த அணிவகுப்பு நடத்தினர்.
Tags:    

Similar News