லாரி - கார் மோதல் : ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு

செஞ்சி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் காரில் வந்தவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-20 05:25 GMT
உயிரிழந்த பூபாலன்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா தாயனூர் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் என்பவர் சென்னையிலிருந்து புதிய காரை வாங்கிக் கொண்டு சொந்த ஊரான தாயனூர் கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தபோது ஆரணியிலிருந்து திருச்சிக்கு இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி மீது பலமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே கார் நசுங்கி கார் ஓட்டிய பூபாலன் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வளத்தி காவல் நிலையத்திற்கு தகவல் அறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கார் நசிங்கி காருக்குள் சிக்கி இருந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News