வெள்ளகோவிலில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல்களை அடுத்து உதவி ஆய்வாளர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்டுள்ள ஆற்று சீட்டுகளை விற்பனை செய்தவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-03-23 02:36 GMT

காவல்துறை விசாரணை



திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக வெள்ளகோவில் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து உதவி ஆய்வாளர் அர்ஜுனன் மூலனூர் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தனியார் திருமண மண்டபம் அருகில் 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த புதுமையைச் சேர்ந்த மூர்த்தி வயது 47 என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி எண்கள் எழுதிய துண்டு சீட்டுகள் மற்றும் ரூபாய் 3130 ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News