குற்றாலம் அருவியில் குறைந்த நீர் வரத்து

குற்றாலம் அருவியில் நீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது.

Update: 2024-04-19 02:12 GMT
 குறைந்த நீரில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்
தென்காசி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்ததையடுத்து குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து இருந்தது. இருப்பினும் இரண்டு தினங்களாக மழை குறைவாக பெய்ததையடுத்து அருவிகளில் தண்ணீர் வரத்து குறைத்தது. இந்நிலையில் காலை முதலே குறைவாக விழும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர். குற்றாலத்தில் குறைவாக தண்ணீர் விழுந்ததால் வெறிச்சோடி காணப்பட்டது.
Tags:    

Similar News