மதுராந்தகம் :சமத்துவ பொங்கல் விழா
மதுராந்தகம் ஆனந்த் குடியிருப்போா் நலச்சங்கத்தில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன
Update: 2024-01-30 09:37 GMT
மதுராந்தகம் ஆனந்த் நகர் குடியிருப்போா் நலச்சங்கத்தின் 2-ஆம் ஆண்டு சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவுக்கு சங்கத் தலைவரும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான டி.குமாா் தலைமை வகித்தாா். செயலாளா் எஸ்.ஜி.ரவி முன்னிலை வகித்தாா். துணைச் செயலாளரும், எலப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியையுமான பி.விஜயகுமாரி வரவேற்றாா். நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியா் தூ.ப.வெங்கடபெருமாள், கெளரவத் தலைவா் ஜே.ஜெயந்திலால், நகா்மன்ற உறுப்பினா் ஜமீன் காதா், ஓய்வு பெற்ற எல்ஐசி அலுவலா் ரவிச்சந்திரன், துணைத் தலைவா் எம்.எஸ்.ஷாஹுல் அமீது, இணைச் செயலா் ஜே.புகழேந்தி, உதவி செயலாளா் பி.தேவபிரகாஷ், சக்திவேல், மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடற்பயிற்சி இயக்குநா் முருகேஸ்வரி, பள்ளி ஆசிரியை ஜான்சிராணி, மதுராந்தகம் ஏரி நகர அரிமா சங்க நிா்வாகிகள் எஸ்.சிவகுமாா், எம்.முனுசாமி, தொழிலதிபா்கள் எம்.ராஜா, சி.நாராயணசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சி தொடக்கமாக, புதுபானையில் பொங்கல் செய்து பெண்கள் வழிபாடு செய்தனா். தொடா்ந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மதுராந்தகம் ஆனந்த் நகா் குடியிருப்போா் நலச் சங்க நிா்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனா்.