மதுரவாயல் : சாலையில் கொட்டி எரிக்கப்படும் தோல் கழிவுகள்

மதுரவாயல் அணுகு சாலையில் தோல் கழிவுகளை கொட்டி எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-07-04 04:55 GMT

சாலையில் கொட்டி எரிக்கப்படும் தோல் கழிவுகள்

தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையை ஒட்டி, அணுகு சாலை உள்ளது. கோவூர், தரப்பாக்கம் பகுதியில் இருந்து வாகனங்களில் எடுத்து வரப்படும் தோல் கழிவுகள், இந்த அணுகுசாலையில் தொடர்ச்சியாக கொட்டப்பட்டு வருகின்றன. இந்த கழிவுகள், இரவு நேரத்தில் தீ வைத்து எரிக்கப்படுவதால், இங்கிருந்து வெளியேறும் புகை குடியிருப்பு பகுதிக்குள் செல்வதால், பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. தோல் கழிவுகளை கொட்டி எரிப்போர் மீது மாசுக்கட்டுப்பாடு வாரியத்தினர், நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி அமைப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News