மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா 

தஞ்சாவூர் மாவட்டம், தேப்பெருமாநல்லூர் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-04-03 01:49 GMT
தீமிதி திருவிழா

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, தேபெருமாநல்லூர் அருள்மிகு ஸ்ரீ மகாமாரியம்மன் அருள்மிகு ஸ்ரீ சுந்தர மகா காளியம்மன் திருக்கோவில் திருவிழா கடந்த 19ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான ஸ்ரீ மகா மாரியம்மன் தீமிதி உற்சவம் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்குதல் எனும் தீமிதித்து தங்களின் நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து வருகிற 3-ம் தேதி ஸ்ரீ சுந்தர மகா காளியம்மன் திருநடனம் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News