மகா சிவராத்திரி : பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

மண்டபம் அருகே பகவதி அம்மன் கோவிலில் மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-03-10 03:11 GMT

பகவதி அம்மன் 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை ஊராட்சி குஞ்சார் வலசையில் உள்ள அருள்மிகு பகவதி அம்மன் கோவிலில் மகாசிவராத்திரி விழா அன்று பகவதி அம்மன், நல்ல சேவகர் மற்றும் கருப்பணசாமிக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகளும் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. விழாவில் பெண்கள், குழந்தைகள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். விழாவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை நாகசாமி, முருகானந்தம், செந்தில், சரவணன் கோவில் பூசாரி நடராஜன் மற்றும் கோவில் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர். விழாவில் கிராமமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News