முதல்வர் குறை தீர்க்கும் முகாம் - எம்எல்ஏ துவக்கி வைப்பு

சென்னையில் நடைப்பெற்ற முதல்வர் குறை தீர்க்கும் முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

Update: 2024-01-24 09:11 GMT

மக்களுடன் முதல்வர் 

சென்னை மாவட்டம், பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11, வார்டு-150, காரம்பாக்கம் சமுதாய நலக் கூடத்தில் நடைபெறும் மக்களுடன் முதல்வர் குறை தீர்க்கும் முகாம் நிகழ்ச்சியில் இன்று காலை 10.30 மணியளவில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி கலந்து கொண்டு மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கி வைத்தார். பின்னர் பொது மக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் சம்மந்தப்பட்ட துறையினரிடம் உரிய முறையில் பரிசீலனை செய்து உடனடியாக மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து சேவைகளை பயனாளிகளுக்கு வழங்கினர்.

இந்நிகழ்வில,  மண்டலம்-11, மண்டலக் குழுத் தலைவர் நொளம்பூர் வே.ராஜன். மாமன்ற உறுப்பினர் ஹேமலதா கணபதி, வட்ட கழக செயலாளர் சி.சுந்தர், மாவட்ட பிரதிநிதி இரா.இராஜேந்திரன், வட்ட கழக நிர்வாகிகள் மு.ஆறுமுகம், தில்லைவாணன், அருள், லதா, ஜெயவேல், இரா.ரமேஷ், இரா.சீனிவாசன், ஜெகன்நாதன், சீனிவாசன், அணிகளின் மாவட்ட துணை அமைப்பாளர்கள் மா.பா.சித்ராலயம், அ.ராகேஷ், பகுதி அமைப்பாளர் அ.கவுஸ்பாஷா,க. நரேன், செல்வதுரை, ஆனந்த், நித்யானந்தம், ஜனா, முனுசாமி, குருசாமி, முருகன், கந்தசாமி, சரவணன், தமிழழகன், மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News