திருமருகலில் மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகை மாவட்டம் திருமருகலில் மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-06-25 05:03 GMT

மலேரியா விழிப்புணர்வு 

நாகை மாவட்டம் திருமருகலில் மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி மலேரியா எதிர்ப்பு மாதத்தை முன்னிட்டு திருமருகல் தலைமை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.வட்டார மருத்துவ அலுவலர் மணிசுந்தரம் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலர் வடிவேல் தலைமை தாங்கினார்.வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம் முன்னிலை வகித்தார்.

இதில் மலேரியா குறித்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ஆனந்தன், செவிலியர்கள்,மருத்துவ பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.அதேபோல் திருமருகல் அரசு மேல்நிலை பள்ளியிலும் மலேரியா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags:    

Similar News