கல்குவாரி குட்டையில் மிதந்த ஆண் சடலம்

திருநெல்வேலி மாவட்டம், பதினாலாம்பேரியில் உள்ல கல்குவாரி குட்டையில் வாலிபரின் சடலம் மிதந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-04-12 01:53 GMT

வாலிபரின் உடல் மிதந்தது

திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி அருகே உள்ள பதினாலாம்பேரி எனும் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் நேற்று (ஏப்.11) இரவு வாலிபரின் உடல் சடலமாக மிதந்தது. இதுகுறித்து சீவலப்பேரி காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News