ஆம்புலன்சில் ஆண் 'குவா'

புதுக்கோட்டை அருகே ஆம்புலன்சில் ஆண் குழந்தை பிறந்தது.

Update: 2024-02-25 07:14 GMT

ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை 

புதுக்கோட்டை அருகே மேல விடுதியை சேர்ந்தவர் சங்கீதா(23), கர்ப்பிணியான இவருக்கு நேற்று காலை 11 மணியளவில் பிரசவவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வாராப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்சில் சங்கீதா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அப்போது வழியிலேயே வலி அதிகமானதால் ஆம்புலன்ஸ் டிரைவர் முருகானந்தம் ஆம்புலன்ஸை நிறுத்தினார். உடன் அவசரகால மருத்துவ நுட்புனர் முருகேசன் பிரசவம் பார்த்து சிகிச்சை அளித்தார். சங்கீதாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதன்பின்பு தாய், சேய் இருவரும் புதுகை ராணியார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
Tags:    

Similar News