கர்ப்பிணியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்த நபர் கைது

கும்பகோணத்தில் கர்ப்பிணியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-23 05:26 GMT

பைல் படம் 

கா்ப்பிணியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்தவா் கைது கும்பகோணம் செட்டிமண்டபம், கணபதி நகரைச் சோ்ந்தவா் அருண்தாஸ். இவா் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி கெளசல்யா (25). சென்னையில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவா், தற்போது பிரசவத்திற்காக கும்பகோணம் வந்துள்ளாா். திங்கள்கிழமை மாலை கெளசல்யா தனது வீட்டின் வாசல் முன்பு நின்றிருந்தாா். அப்போது மோட்டாா் சைக்கிளில் வந்த 2 போ், கணவரின் உறவினா் பெயரைச் சொல்லி முகவரி கேட்டுவிட்டு குடிக்க தண்ணீா் கேட்டனராம்.

வீட்டுக்குள் தண்ணீா் எடுக்க சென்ற கெளசல்யாவை பின் தொடா்ந்து சென்ற அவா்கள், கத்தியை காட்டி மிரட்டி அவா் அணிந்திருந்த 6 பவுன் தாலிச் சங்கிலி மற்றும் 4 பவுன் தங்க சங்கிலி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியோடினா். இதுதொடா்பான புகாரின்பேரில், கும்பகோணம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, பிரபு (28) என்பவரை கைது செய்து, மற்றொருவரை தேடி வருகின்றனா். 

Tags:    

Similar News