16 வயது சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோவில் கைது

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் 16 வயது சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோவில் கைது செய்தனர்.

Update: 2024-06-16 04:59 GMT
புளியங்குடியில் 16 வயது சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோவில் கைது
தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தாமணி மேற்கு ரத வீதியைச் சேர்ந்த அய்யா என்பவரின் மகன் கார்த்திக்(25). இவர் அப்பகுதியில் உள்ள 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றி அவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டு திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கார்த்திக் சிறுமியுடன் சண்டையிட்டதால் சிறுமி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இது குறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ராஜா விசாரணை மேற்கொண்டு கார்த்திக் (25) மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார்.
Tags:    

Similar News