முன்விரோதத்தில் தாக்கியவர் அதிரடி கைது

திருநெல்வேலியில் முன்விரோதத்தால் தாக்குதல் நடத்தியவர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-03-31 05:43 GMT

முன்விரோதத்தால் தகராறு

நெல்லை கோபாலசமுத்திரத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியனுக்கும், கதிரவன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.இந்த நிலையில் பாலசுப்பிரமணியன் நடந்து சென்றபோது கதிரவன் வழிமறித்து அவதூறாக பேசி கையால் தாக்கி மிரட்டியுள்ளார்.இதுகுறித்து பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு கதிரவனை நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News