கள்ளகாதலால் நடந்த கொலை

கள்ளகாதலியை கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-01-25 13:54 GMT

கள்ளகாதலன் கைது

அரியலூர் மாவட்டம், பார்ப்பனஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் அன்னபட்டு. இவர் வாரணவாசி ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரம் எதிரே நிலத்தினை குத்தகைக்கு எடுத்து சோளம் பயிரிட்டு உள்ளார். இந்நிலையில் நேற்று மாலை வரை அன்னபட்டு வீடு திரும்பததால், அவரது மகன் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அங்குள்ள மோட்டார் கொட்டகைக்குள் சாக்குபையில் மூடிய நிலையில் அன்னபட்டு உயிர் இழந்து கிடந்துள்ளார்.

இதனையறிந்த கீழப்பழூவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கீழையூர் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவருடன் கள்ள தொடர்பு இருந்த நிலையில், சோளகாட்டிற்கு நேற்று பாலமுருகன் வந்துள்ளார். பின்னர் இருவரும் உல்லாசமாக இருந்த நிலையில், பாலமுருகனுக்கும், அன்னபட்டுவிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது அன்னபட்டுவை சுத்தியலை கொண்டு பாலமுருகன் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் அறையை பூட்டிவிட்டு தப்பி சென்றதாக பாலமுருகன் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News