நெமிலி அருகே பைக் நிலை தடுமாறி விழுந்தவர் பலி

நெமிலி அருகே டூவீலர் நிலை தடுமாறி கீழே விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2024-06-29 10:48 GMT

காவல் நிலையம்

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சிக்கு உட்பட்ட புன்னை பகுதியில் வசித்து வந்தவர் ஜோதி (55). இவர் டூ வீலரில் சென்று கொண்டிருந்தார். நெமிலி அண்ணா சாலையில் சென்றபோது திடீரென டூ வீலர் நிலைதடுமாறியதில் ஜோதி கீழே விழுந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்படடார்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஜோதி இறந்து விட்டார். இது குறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News