மூதாட்டியிடம் நகை பறிக்க முயற்சித்த நபர் போலீசாரிடம் ஒப்படைப்பு

மணப்பாறையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிக்க முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

Update: 2024-05-08 13:51 GMT

மணப்பாறையை அடுத்த மணப்பாறைப்பட்டி ஐயப்பன் நகரில் வசிப்பவா் நாகராஜன் மனைவி எழிலரசி (62). கோயிலுக்குச் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த இவரை மணப்பாறைப்பட்டி சாலையில் பின்தொடா்ந்த ஒருவா், மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை பறிக்க முயன்றாா். அப்போது அவரிடம் போராடிய மூதாட்டியின் கைகளில் காயம் ஏற்பட்டது.

பின்னா் நகையைப் பறிக்க முடியாத நிலையில் மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு தப்ப அந்த இளைஞரை, மூதாட்டியின் நாய் தப்ப விடாமல் தடுத்ததையடுத்து ஓடிவந்த அப்பகுதிவாசிகள் அவரை மடக்கி பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கினா். தகவலறிந்து வந்த காவல் ஆய்வாளா் க. குணசேகரன் தலைமையிலான போலீஸாா் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் அவா் சிவகங்கை மாவட்டம் புளியால் திடகோட்டை பகுதி சூசைமாணிக்கம் மகன் குழந்தைசாமி (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து மணப்பாறை போலீஸாா் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

Tags:    

Similar News