12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மகிழ்ச்சி அளிக்கிறது – மாணிக்கம் தாகூர்

மேல்நிலை‌ இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது என விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2024-05-07 02:27 GMT
மேல்நிலை‌ இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது என விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்

தமிழகம் முழுவதும் 12 வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியான நிலையில் இந்த தேர்வு முடிவு குறித்து விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வாழ்த்து செய்தி வெளயீட்டு உள்ளார். தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ள தேர்வு முடிவில் அரசு பள்ளிகளில் நல்ல தேர்ச்சி வந்து இருப்பதாகவும்,. இதில் 95 சதவீதம் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் 100 சதவீதம் பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

அதேபோல விருதுநகர் மாவட்டத்தில் 96.64 சதவீதமும் மதுரை மாவட்டத்தில் 95.19 சதவீதமும் தேர்ச்சி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர்களுக்கு மாணிக்கம் தாகூர் வாழ்த்துகள் தெரிவித்து உள்ளார். மேலும் பன்னிரெண்டாம் வகுப்பு நமது கல்விமுறையில் மிக முக்கிய ஆண்டு. பள்ளி வாழ்க்கை நிறைவுபெற்று கல்லூரிக்கு அடியெடுத்து வைக்கும் மாணவ-மாணவிகள் நீங்கள் அனைவரும் அடுத்து தேர்வு செய்யும் மேற்படிப்புக்கு வெற்றி பெற மீண்டும் வாழ்த்துகிறேன்.

அதைப்போல +2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகளுக்கு எனது அன்பான வேண்டுகோள் மனம் தளர வேண்டாம். நீங்கள் அடுத்து வருகின்ற இரண்டு மாதங்களுக்குள் தேர்வு எழுதி வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு பல புதிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன நீங்கள் இன்று வெற்றி சிறிதுதூரம் இருக்கலாம். நாளை உங்களுக்கான வெற்றியாக இருக்கும் என மாணிக்கம் தாகூர் தெரிவித்து உள்ளார்

Tags:    

Similar News