17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை;

Update: 2023-11-30 01:09 GMT

௧௭ வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு ௨௦ ஆண்டுகள் சிறை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பெரம்பலூர் துறைமங்கலம் கே.கே.நகரை சேர்ந்தவர் வையாபுரி மகன் செல்வம் (45). இவர் கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் 10ம் அதே பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 17 வயது சிறுமியை வலுக்கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து குற்றவாளி செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.பின்னர் செல்வம் ஜாமீனில் வெளியே வந்தார்.

Advertisement

இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில்,நவம்பர் 29ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பொருப்பில் தனசேகரன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த செல்வத்திற்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் கூடுதலாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும் எனவும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்தார். சிறை தண்டனைகளை குற்றவாளி ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் உத்தரவிட்டார். இதையடுத்து குற்றவாளி செல்வத்தை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News