ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி

தேவகோட்டையில் இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

Update: 2024-06-29 08:02 GMT

ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை இராம்நகரில் திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஆல் தி சில்ரன் அமைப்பு இணைந்து ரத்தக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை கோட்டாட்சியர் பால்துரை, காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பார்த்திபன் ஆகியோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.

கோட்டாட்சியர் அலுவலக நுழைவாயில் இருந்து மாரத்தான் போட்டி தொடங்கி ராம்நகர், தானிச்சாவூரணி வழியாக கண்டதேவி ஊரணி வரை சென்றடைந்தது. சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு, மேலும் ஆண்கள் பிரிவில் முதலாவதாக ராமச்சந்திரன், இரண்டாவதாக முத்துராமலிங்கம், மூன்றாவதாக ரூபன், பெண்கள் பிரிவில் முதலாவதாக நந்தினி என வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News