மாரியம்மன் கோயில் தேரோட்டம்

கீரமங்கலம் அருகேயுள்ள குளமங்கலம் மணிவர்ண மழை மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-04 04:46 GMT

கீரமங்கலம் அருகேயுள்ள குளமங்கலம் மணிவர்ண மழை மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது.

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள குளமங்கலம் மணிவர்ண மழை மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது.

குளமங்கலம் பிரசித்திபெற்ற மணிவர்ண மழை மாரியம்மன் கோயில் தேரோட்டம் கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து கோயிலில் தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி, முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட 2 தேர்களில் விநாயகர்,மணிவர்ண மழை மாரியம்மனை எழுந்தருளச் செய்து தேரோடும் வீதிகள் வழியே ஏராளமானோர் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். இதில், குளமங்கலம், கீரமங்கலம், கொத்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். கீரமங்கலம் போலீஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News