வடலூர் சத்திய ஞான சபையில் மாசி மாத ஜோதி தரிசனம்
வடலூர் சத்திய ஞான சபையில் நேற்று இரவு மாசி மாத ஜோதி தரிசனம் மூன்று முறை காண்பிக்கப்பட்டது.;
Update: 2024-02-22 02:34 GMT
வடலூர் சத்திய ஞான சபையில் நேற்று இரவு மாசி மாத ஜோதி தரிசனம் மூன்று முறை காண்பிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு மாசி மாத ஜோதி தரிசனம் மூன்று முறை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.