திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோவிலில் மாசிமக விழா தொடக்கம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோவிலில் மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2024-02-17 10:01 GMT

கோவிலில் கொடியேற்றம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோவிலில் மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோவிலில் மாசி மகப் பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மாசி மகப் பெருவிழா நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜப் பெருமாள் கோவில் உள்ளது.இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமகப் பெருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த விழா வருகிற 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.விழாவையொட்டி நேற்று முதல் நாள் இரவு அங்குரார்ப்பணம் அதனைத் தொடர்ந்து காலை கொடியேற்று விழா நடைபெற்றது.

இதில் தக்கார் முருகன், செயல் அலுவலர் குணசேகரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழா நாட்களில் தினமும் தங்கப்பல்லக்கில் திருமேனி சேவை மற்றும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 19-ம் தேதி தங்க கருடசேவையும், 22-ஆம் தேதி காலை 10 மணிக்கு தேரோட்டமும், 24-ஆம் தேதி திருமலைராஜன் பட்டினம் கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் 29-ஆம் தேதி இரவு 10 மணிக்கு திருக்கண்ணபுரம் நித்திய புஷ்கரணி திருக்குளத்தில் தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News